கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
விமான நிலைய செயல்பாடு
அதன்படி, கட்டுநாயக்கவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், திட்டமிடப்பட்ட விமான நேரத்தில் இருந்து 4 மணி நேரத்திற்கு முன்னதாக தங்கள் அனுமதிகளை சரிபார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
இது விமான பயணிகள் சேவை வசதிகளை மேம்படுத்தும் என்றும் விமான பயணிகளுக்கு விமான நிலைய செயல்பாடுகளை எளிதாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.