Home இலங்கை அரசியல் 2025 வரவு செலவுத் திட்டத்தின் முதல் வாசிப்பு: வேகமெடுக்கும் அநுர அரசு

2025 வரவு செலவுத் திட்டத்தின் முதல் வாசிப்பு: வேகமெடுக்கும் அநுர அரசு

0

2025 ஆம் ஆண்டு முதல் வாசிப்புக்கான வரவு செலவுத் திட்டத்தை 2025 ஜனவரி 9 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் நேற்று (31) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்தின் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு

இதன்படி, வரவு செலவுத் திட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தை பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம் பெப்ரவரி 18 முதல் 25 வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது.

இதேவேளை, பெப்ரவரி 25 மாலை 6:00 மணிக்கு வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.

மூன்றாம் வாசிப்பு

மேலும், வரவு செலவுத் திட்டம் தொடர்பான குழு விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

அதன் பின்னர், வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பை மார்ச் 21ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version