Home இலங்கை அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிய நிரோசன் பிரேமரட்ன

கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிய நிரோசன் பிரேமரட்ன

0

Courtesy: Sivaa Mayuri

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமை பொறுப்பில் இருந்தும் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பிரேமரத்ன (Niroshan Premaratne) விலகியுள்ளார். 

கட்சியின் பொதுச்செயலாளர் வாசுதேவ நாணயக்காரவுக்கு (Vasudeva Nanayakkara) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

அனுப்பப்பட்டுள்ள கடிதம் 

எனினும், தமது தீர்மானத்துக்கான காரணத்தை அவர் கடிதத்தில் குறிப்பிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் மூத்த இடதுசாரி தலைவரான வாசுதேவ நாணயக்கார, தற்போது ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் கூட்டணியுடன் இணைந்து செயற்படுகின்றார்.

இந்த கூட்டணியில் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version