Home இலங்கை அரசியல் சபாநாயகருக்கு எதிராக மொட்டுக் கட்சியின் கடுமையான தீர்மானம்

சபாநாயகருக்கு எதிராக மொட்டுக் கட்சியின் கடுமையான தீர்மானம்

0

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு (Asoka Ranwala) எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (12) கலந்து கொண்டு கருத்து தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் ஆரம்பத்தில் கலாநிதி பட்டம் மற்றும் பல்வேறு பட்டங்களை பெற்றுள்ளதாக காட்டி மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற பங்களிப்பு

இதன்படி, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தனது நாடாளுமன்றக் குழுவின் ஊடாக சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாகவும், இதற்கு முழு எதிர்க்கட்சியினரும், அரசாங்கத்தின் மனசாட்சியுள்ள உறுப்பினர்களும் பங்களிப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version