முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, நீதிமன்ற வளாகத்திற்குள் பௌத்த தேரர்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இது தொடர்பில் மாலபே சீலரத்ன தேரர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அச்சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேரர்கள்,
“கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 26ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு நடைபெற்ற போது நீதிமன்ற வளாகத்திற்குள் செல்ல பௌத்த தேரர்களுக்கு தடைவிதித்தனர்.
இது தொடர்பில் மாலபே சீலரத்தின தேரர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அன்று கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்திற்குள் செல்வதற்கு நாம் கௌரவமான கோரிக்கை விடுத்தோம்.
ஆனால் பொலிஸார் நீதிமன்ற வளாகத்திற்குள் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை.அப்போது நாங்கள் கோட்டோம் யார் உங்களுக்கு ஆணை வழங்கியது என்று? கோட்டை நீதிவான் நீதிமன்ற நீதிபதியா? என்று அதற்கு அவர்கள் மேல் இடத்தின் ஆணை என்று கூறினர்.
அதன் பின்னர் நாங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தோம். அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் அவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது.
அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளவே எங்களை இன்று அழைத்துள்ளனர்” என கூறியுள்ளனர்.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய லங்காசிறியின் விசேட செய்தி தொகுப்பு இதோ….
[UHG3JBS
]
