Home இலங்கை அரசியல் தேர்தல் பிரசாரங்களை பணிகளை ஒருங்கிணைக்க திண்டாடும் ஐக்கிய மக்கள் சக்தி

தேர்தல் பிரசாரங்களை பணிகளை ஒருங்கிணைக்க திண்டாடும் ஐக்கிய மக்கள் சக்தி

0

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, ஆளணி பற்றாக்குறை காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி திண்டாடிக் கொண்டிருப்பதாக அரசியல் தரப்புக்களால் தெரிய வந்துள்ளது. 

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் ​போது ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரப் பணிகளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க ஒருங்கிணைத்திருந்தார். 

பொதுத் தேர்தல் 

எனினும், அவர் தற்போதைக்கு அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருக்க தலைப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகளை ஒருங்கிணைக்க பொருத்தமான ஒருவரைத் தேடிக் கொள்வதில் ஐக்கிய மக்கள் சக்தி திண்டாடிக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறன.

இந்நிலையில் அந்த பணியை பொறுப்பேற்க முன்வரும் நபர்கள் முன்வைக்கும் நிபந்தனைகள் தொடர்பில் கட்சியின் உயர்மட்டம், கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version