Home இலங்கை அரசியல் தமிழ் தேசியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டிய வடக்கு – கிழக்கு மக்கள்

தமிழ் தேசியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டிய வடக்கு – கிழக்கு மக்கள்

0

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில், வடக்கு மக்கள் இலங்கை தமிழரசுக் கட்சி முன்வைத்த நிலைப்பாட்டுக்கு ஆதரவளித்திருந்தாலும், ஒப்பீட்டளவில் அவர்கள் பொதுவேட்பாளர் ஆதரவு மூலம் தமிழ் தேசியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர், ”இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாங்கள் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றோம்.

தென்னிலங்கை மக்கள் எவ்வாறு கடந்த கால அரசியல் தலைமைகளை புறம்தள்ளி மாற்றத்தை விறுப்பினர்களோ அதையே தமிழ் தேசமும் விரும்புகிறது.

என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

மேலும், ஒற்றையாட்சி முறையை தவிர்த்து சமஸ்டியை முன்னிறுத்தும் ஆட்சியையே நங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

NO COMMENTS

Exit mobile version