வடமாகாண கல்வி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய இடமாற்றம் 2026 முறையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தினால்தாக்கல் செய்யப்பட்ட வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
முடிவுக்கு கொண்டுவரப்பட்ட வழக்கு
குறித்த வழக்கு இன்று (16) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த அனைத்து ஆசிரியர்களின் இடமாற்றங்களையும் மீறப்பெறுவதாக எதிராளிகள் சார்பில் முன்னிலையாகியிருந்த அரச சட்டத்தரணி மன்றுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
இதனையடுத்து குறித்த வழக்கு இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
