Home இலங்கை சமூகம் காட்டில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட ஆண் குழந்தை

காட்டில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட ஆண் குழந்தை

0

நோர்வூட் (Norwood) காவல்துறை பிரிவிற்குட்பட்ட டங்கள் வனப்பகுதியில் இருந்து 04 வயது ஆண் குழந்தை ஒன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்றைய (18) தினம் இடம்பெற்றுள்ளது..

குழந்தையை லக்ஸபான பகுதியில் இருந்து டங்கள் தோட்டப்பகுதிக்கு திருமண வைபவம் ஒன்றுக்கு அவருடைய பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர்.

முறைப்பாடு

அதன்போது, விளையாடி கொண்டிருந்த நிலையில் தீடிரென குழந்தை காணாமல் போனதை தொடர்ந்து (17) மாலை நோர்வூட் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

முறைபாட்டுக்கு அமைய காவல்துறையினரும் பொதுமக்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வி கேமராவின் உதவியோடு குழந்தை மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு குழந்தை காணாமல் போன சம்பவம் தொடர்பில் நோர்வூட் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version