Home இலங்கை அரசியல் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு நாம் சதி செய்யவில்லை! எதிரணி தெரிவிப்பு

ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு நாம் சதி செய்யவில்லை! எதிரணி தெரிவிப்பு

0

“ஆட்சியைக்
கவிழ்ப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எவ்வித
சூழ்ச்சியும் செய்யவில்லை” என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் மேலும் கூறியதவாது,”இந்த அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அந்தப்
பொறுப்பில் இருந்து விலகிவிட முடியாது. நாம் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு சூழ்ச்சி செய்யவில்லை.

சிறுபிள்ளைத்தனமான அறிவிப்பு

எனவே, சிறுபிள்ளைத்தனமான அறிவிப்புகளை விடுப்பதை ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க நிறுத்த வேண்டும்.

அநுர தரப்பினர் செய்ய முடியும் என உறுதியளித்தே ஆட்சிக்கு வந்தார்கள். எனவே,
உறுதிமொழிகளை நிறைவேற்றிக் காட்ட வேண்டும். அந்த உறுதிமொழிகள்
நிறைவேற்றப்படும் வரை நாம் அரசைப் பாதுகாப்போம்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்திக்குள் எவ்வித குழப்பமும் இல்லை.”என தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version