Home இலங்கை சமூகம் அரச ஊழியர்களுக்கு ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

அரச ஊழியர்களுக்கு ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

0

தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) இடம்பெற்ற 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தெளிவுபடுத்தும் விசேட ஊடக கலந்துரையாடலின் போது ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் கடமைகளுக்காக நியமனம் பெற்றுள்ள சகல அதிகாரிகளும் தமது நியமனத்தை மாற்றுவதற்கு அல்லது இரத்துச்செய்வதற்கு முடியாது என அவர் அதன் போது தெரிவித்துள்ளார்.

தேர்தல் கடமைகள்

தேர்தல் கடமைகளுக்காக நியமனம் பெற்றுள்ள சகல அதிகாரிகளும் தமக்கு வழங்கப்பட்டுள்ள குறித்த தினத்தில், தமக்கு வழங்கப்பட்டுள்ள நிலையத்திற்கு, நியமிக்கப்பட்டுள்ள கடமைகளுக்காக சமூகமளிப்பது கட்டாயம் என்றும் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நாளையதினம் (14) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Source: https://ibctamil.com/article/notice-issued-to-government-employees-1731451762

NO COMMENTS

Exit mobile version