அரசாங்கம் கடந்த ஒரு வருடத்தில் விட்ட பெரும் தவறு ‘காலதாமதம்’ என சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை கஜமுகன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் ஏற்கனவே நடந்த ஊழல்களுக்கு தண்டனை வழங்கும் அதேவேளை, மக்களின் அடிப்படை வாழ்க்கை பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு பாதகம்
அவ்வாறு செய்யவில்லை எனில், இன்னும் சிறிது காலத்தில் அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை என ஒரு அவப்பெயர் உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது, எதிர்வரும் தேர்தல்களில் அரசாங்கத்திற்கு பாதகமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
