Home இலங்கை அரசியல் யாழில் வணிகர் கழக பிரதிநிதிகளை சந்தித்த தேசிய மக்கள் சக்தியினர்

யாழில் வணிகர் கழக பிரதிநிதிகளை சந்தித்த தேசிய மக்கள் சக்தியினர்

0

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், யாழ்ப்பாணம் (Jaffna) வணிகர் கழக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியியுள்ளனர்.

குறித்த சந்திப்பானது நேற்று (20) யாழ். வணிகர் கழகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விடையங்கள்
கலந்துரையாடப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர்
சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல்

அத்தோடு, நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தமிழ்
பொது வேட்பாளருக்கு ஏன் ஆதரவு வழங்கியுள்ளது என்பது தொடர்பாக தேசிய மக்கள்
சக்தியின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியதாக யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர்
இ.ஜெயசேகரம் கூறியுள்ளார்.

இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர்
சதுரங்க அபேசிங்க, பில் தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட செயற்குழு
உறுப்பினர் பேராசிரியர் ருவான் ரணசிங்க, யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர்
இ.ஜெயசேகரம், தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம்
சந்திரசேகர் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/npp-meets-jaffna-chamber-on-economy-tourism-1724202147

NO COMMENTS

Exit mobile version