Home இலங்கை அரசியல் இதற்காகவே ஆட்சியை கோருகிறோம்: பகிரங்கமாக வெளிப்படுத்திய அனுரகுமார

இதற்காகவே ஆட்சியை கோருகிறோம்: பகிரங்கமாக வெளிப்படுத்திய அனுரகுமார

0

நாட்டில் நீண்ட காலமாக நிலவும் அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காகவே ஆட்சியை கோருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

பண்டுவஸ்நுவர பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் ஊழல் மோசடி நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வற் வரி

அத்தோடு, மோசடியில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில், நாட்டில் நீண்ட காலமாக நிலவும் அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காகவே நாங்கள் ஆட்சியைக் கோருகிறோம்.

அதன் முதற் கட்டமாக ஊழல் மோசடியைத் தடுப்பதுடன் மோசடியில் ஈடுபட்டோரை கைது செய்ய வேண்டும்.பால்மா உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தற்போது சடுதியாக அதிகரித்துள்ளன.

ரணில் விக்ரமசிங்க உணவுப் பொருட்களுக்கும் வற் வரியை விதித்தமையே இதற்கான காரணமாகும்” என கூறியுள்ளார்.

Source: https://ibctamil.com/article/npp-presidential-candidate-anura-s-speach-1724283806

NO COMMENTS

Exit mobile version