Home இலங்கை அரசியல் யாழில் அதிகாரத்திற்கு வரும் தேசிய மக்கள் சக்தி : இராமலிங்கம் சந்திரசேகர்

யாழில் அதிகாரத்திற்கு வரும் தேசிய மக்கள் சக்தி : இராமலிங்கம் சந்திரசேகர்

0

யாழ். மாவட்டத்தில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார். 

யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்குத் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரையேற்பு நிகழ்வு நேற்று (31.05.2025) நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் சந்திரசேகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அநுர அரசாங்கம்

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் , “இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய அகதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இந்தியாவில் இருந்து வருபவர்களை அநுர அரசாங்கம் கைது செய்கின்றது
என சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். 

அவரை அரசாங்கம் கைது செய்யவில்லை. இந்த விடயத்தில் உடனடியாக தலையிடப்பட்டுள்ளது. அதற்கமைய
குறித்த நபருக்கு பிணை வழங்கப்பட வேண்டும் எனவும், பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை
தெரிவிக்ககூடாது எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சிகாலத்தில் இந்நாடு கட்டியெழுப்படாவிட்டால் இலங்கைக்கு விமோசனம் கிடையாது என்பதே புலம்பெயர் தமிழர்களின் கருத்தாக உள்ளது.

தீய குணம் படைத்த – தீய நோக்கத்துடன் செயற்படும அரசியல் சக்திகள் உள்ளன. அந்த தீய சக்திகளை சுத்தப்படுத்த வேண்டும். அதனை நாம் செய்ய வேண்டும்.

உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் சிறப்பாக செயற்பட வேண்டும். யாழ்.மாவட்டத்தில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும். 

அதேவேளை, மேலும் சில சபைகளில் எதிர்க்கட்சி தலைவராகக்கூட சிறப்பாக செயற்பட முடியும்.” என தெரிவித்தார். 

NO COMMENTS

Exit mobile version