Home இலங்கை அரசியல் யாழிலுள்ள உள்ளூராட்சி சபைகளை தேசிய மக்கள் சக்தியே கைப்பற்றும் : சந்திரசேகர் நம்பிக்கை

யாழிலுள்ள உள்ளூராட்சி சபைகளை தேசிய மக்கள் சக்தியே கைப்பற்றும் : சந்திரசேகர் நம்பிக்கை

0

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சி
அமைக்கும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) இன்று (13) தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள 17 உள்ளூராட்சி
சபைகளுக்குமான அங்கிகரிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக
இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகைதந்த போதே
அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சந்திப்பில் கலந்துகொண்டோர்

அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நாளை (14) செலுத்தவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தியின் வரவுசெலவுத் திட்டத்தில் அபிவிருத்திக்காக பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த சந்திப்பின் போது தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன்
இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா, தொகுதி
அமைப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட சிலரும் வருகை தந்திருந்தனர்.

https://www.youtube.com/embed/3MULYAVH9Js

NO COMMENTS

Exit mobile version