Home இலங்கை அரசியல் நுகேகொடை மாபெரும் பேரணியில் நாமலின் உரை! கலைந்து செல்லும் மக்கள்..

நுகேகொடை மாபெரும் பேரணியில் நாமலின் உரை! கலைந்து செல்லும் மக்கள்..

0

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் பேரணி பொதுஜன பெரமுன உறுப்பினர் நாமல் ராஜபக்ச உரையாற்றும்பொது கலைந்து செல்வதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மாபெரும் பேரணி ஒன்றை நுகேகொடையில் தற்போது நடத்தி வருகின்றனர்.

களைந்து செல்லும் மக்கள்

பெருமளவான மக்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியுள்ளது.

பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட மேலும் பல எதிர்கட்சிகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளனர்.

அந்தவகையில் குறித் பேரணியில் பொதுஜன பெரமுன பலரும் உரையாற்றிய வண்ணம் உள்ளனர்.

இந்தநிலையில் சற்றுமுன்னர் நாமல் ராஜபக்ச உரையாற்ற ஆரம்பித்ததை இடுத்து மக்கள் கலைந்து செல்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version