Home ஏனையவை வாழ்க்கைமுறை அதிகரிக்கும் ஆபத்து! மக்களே அவதானம்..

அதிகரிக்கும் ஆபத்து! மக்களே அவதானம்..

0

நாட்டில் டெங்கு  நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வருடத்தின் இதுவரையான நாட்களில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்க 59 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

இதன்படி, 59ஆயிரத்து 638 டெங்கு நோயாளர்களில் இதுவரை பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

அதிகரித்துள்ள எண்ணிக்கை 

ஜூன் மாதத்தில் மாத்திரம் அதிகபட்சமாக 21 ஆயிரத்து 546 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

அத்துடன், ஜூலை மாதத்தின் கடந்த நான்கு நாட்களில் மாத்திரம், 4,251 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் அடிப்படையில், மேல் மாகாணத்தில் மாத்திரம் 31,249 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன், தென் மாகாணத்தில் மாகாணத்தில் 9,507 நோயாளிகளும்,  சபரகமுவ மாகாணத்தில் 5,172 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Source: https://tamilwin.com/article/number-of-dengue-patients-is-increasing-rapidly-1783225008

NO COMMENTS

Exit mobile version