Home முக்கியச் செய்திகள் யாழ். தீவகத்தில் திறந்து வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம்

யாழ். தீவகத்தில் திறந்து வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம்

0

யாழ்ப்பாணம் (Jaffna) தீவகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் (Disabilities) எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு அவர்களுக்கான அலுவலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு – மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தில் நிறுவன ஸ்தாபகர் அன்ரன் செபராசா ஜெயானந்தன் தலைமையில் குறித்த அலுவலகம் நேற்று (14) திறந்து வைக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

மாற்றுத் திறனாளிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள்

இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், பொது அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள், புலம்பெயர் உறவுகள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை மாற்றுத் திறனாளிகள் மாற்றத்தை ஏற்படுத்த உருவெடுத்தவர்கள், இன்றைய சமூகத்தில் பல இழிவான செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்ற காலகட்டத்திலும் முன்னுதாரணமாக செயற்பட்டு வரும் மாற்றுத் திறனாளிகள் கட்டாயம் பாராட்டப்பட வேண்டியவர்கள் என நிறுவன ஸ்தாபகரும் புங்குடுதீவு மாற்று திறனாளிகள் சங்க செயலாளரும் கருத்து தெரிவித்திருந்தார்.

NO COMMENTS

Exit mobile version