Home முக்கியச் செய்திகள் முல்லைத்தீவு காட்டினுள் மரையை வேட்டையாடிய சந்தேகநபர் கைது!

முல்லைத்தீவு காட்டினுள் மரையை வேட்டையாடிய சந்தேகநபர் கைது!

0

முல்லைத்தீவு(Mullaitivu) – புதுக்குடியிருப்பு காட்டினுள் அத்துமீறி உள்நுழைந்து பாரிய மரை
ஒன்றினை வேட்டையாடிய ஒருவரை புதுக்குடியிருப்பு வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று(07.01.2025) இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்றையதினம்(07) புதுக்குடியிருப்பு – மண்ணகண்டல் ஒதுக்க காட்டினுள் ஒருவர் அத்து மீறி உள்
நுழைந்து துப்பாக்கியால் உயிரினங்களை அச்சுறுத்தி மரை ஒன்றினை வேட்டையாடிய போது புதுக்குடியிருப்பு பகுதி வன அதிகாரி தலைமயின் கீழ்,
விசேட அதிரடிப் படையினர் மற்றும் திணைக்களத்தினரால் சுற்றிவளைப்பு நடவடிக்கை
ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கை

இதன்போது, புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டதோடு மரை இறைச்சியும், மரையை வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் சந்தேகநபர் ஒப்படைக்கபட்டுள்ளார்.

இந்நிலையில், வனஜீவராசிகள் திணைக்களத்தினால் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில்
வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை திணைக்களத்தினர் முன்னெடுத்து
வருகின்றனர். 

மேலதிக தகவல் – கஜிந்தன்

NO COMMENTS

Exit mobile version