Home முக்கியச் செய்திகள் யாழ்ப்பாணத்தில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

0

 யாழ்ப்பாணம் – பாசையூர் பகுதியில் 35 கிலோ 400 கிராம் எடையுடைய
ஆமை இறைச்சியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் காவல்துறை
போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version