கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற கத்து குத்து தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் கொட்டாஞ்சேனை ஆறாம் ஒழுங்கைப் பகுதியில் இன்று (18) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 53 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடையொன்றின் முன்னால் நின்றிருந்த நபரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
