Home இலங்கை குற்றம் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருவர் கைது

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருவர் கைது

0

ஒரு ​கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து ஹெரோயின் போதைப் பொருள் 300 கிராம், ஐஸ் போதைப் பொருள் 300 கிராம் மற்றும் அவற்றை எடுத்துச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

   

பொலிஸார் சோதனை நடவடிக்கை

முகத்தை முற்றாக மறைக்கும் வகையிலான ஹெல்மட் ஒன்றுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடித் திரிந்த நிலையில், பொலிஸார் குறித்த நபரை சோதனையிட்ட போதே மேற்குறித்த போதைப் பொருட்கள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  

NO COMMENTS

Exit mobile version