Home இந்தியா ஆபரேஷன் கெல்லரின் அதிரடி தாக்குதல் : முக்கிய மூன்று தீவிரவாதிகள் பலி

ஆபரேஷன் கெல்லரின் அதிரடி தாக்குதல் : முக்கிய மூன்று தீவிரவாதிகள் பலி

0

ஆபரேஷன் கெல்லர் இராணுவ நடவடிக்கையின் போது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்றைய தினம் (11.05.2025) மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் கெல்லர் இராணுவ நடவடிக்கையின் போதே இவர்கள் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்திய இராணுவம்

இது பற்றி இந்திய இராணுவம் வெளியிட்ட அறிக்கைப்படி, ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவிலிருந்து கஉளவுத்துறை தகவல் கிடைத்ததை அடுத்து, இராணுவம் ஆபரேஷன் கெல்லரைத் தொடங்கியது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது, ​​பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக இந்திய இராணுவமும் தாக்குதல் நடத்தியது.

இறுதியில் இதன் விளைவாக மூன்று தீவிர பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளது.

எனினும் இந்த நடவடிக்கை இன்னும் தொடர்கிறது என்றும் கூறியுள்ளது. ஷோபியனில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து மூன்று ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version