Home முக்கியச் செய்திகள் தொடரும் வெப்பமான காலநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தொடரும் வெப்பமான காலநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0

நாட்டின் சில பகுதிகளில் நாளைய தினம்(5) வெப்பமான காலநிலை நிலவும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது.

வெப்பமான வானிலை குறித்து இன்று (04.05.2024) வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல பிரதேசங்களுக்கு இடியுடன் கூடிய மழை: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அதிகரித்த வெப்பநிலை

அதன்படி நாளைய தினம் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம் “அதிக அவதானம்” செலுத்தப்பட வேண்டிய நிலையில் காணப்படக்கூடும்  என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் வெப்பநிலை கவனம் செலுத்தும் மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடலலை மேலெழும் அபாயம்…வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version