Home இலங்கை அரசியல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசிடம் பறந்த கோரிக்கை

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசிடம் பறந்த கோரிக்கை

0

நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பெப்ரல் அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபே ரத்னவுக்கு அனுப்பிய கடிதத்தில், பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் ரோஹன ஹெட்டியாராச்சி, மாகாணசபை அமைப்பு ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயக கட்டமைப்பாக மீண்டும் நிறுவப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

ஜனநாயகத்திற்குப் புறம்பானது

தற்போது அது அதிகாரிகள் கையில் மட்டுமே இருப்பது ஜனநாயகத்திற்குப் புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வாக்களிக்கும் உரிமை அரசியலமைப்பின் 3வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மக்களின் இறையாண்மை அதிகாரத்தின் ஒரு பகுதியாகும்.

நீண்டகால தாமதம் ஜனநாயக செயல்முறைகள் மீதான மக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தியுள்ளதாகவும் ரோஹ யாராச்சி எச்சரித்துள்ளார்.

ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை

இதேவேளை, மாகாணசபைத் தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் மாதத்தில் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, சகல தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த முடியும் என மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

[O4N7A15
]

NO COMMENTS

Exit mobile version