Home உலகம் கனடாவில் முக்கிய மருந்தொன்றிற்குத் தட்டுப்பாடு : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

கனடாவில் முக்கிய மருந்தொன்றிற்குத் தட்டுப்பாடு : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

0

கனடாவில் (Canada), முக்கியமான வலி நிவாரணி ஒன்றிற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கனடா சுகாதாரத்துறையின் இணையதளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ylenol 3 மற்றும் Percocet என்னும் வலி நிவாரணிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கனேடிய மருந்தகக் கூட்டமைப்பின் மூத்த இயக்குநரான Sadaf Faisal “மருந்தகங்களில் இந்த மருந்துகளுக்கு மாற்றாக வேறு மருந்துகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். 

வலி நிவாரணி

மேலும்,மருந்துகள் முழுமையாக முடியும் வரை காத்திருக்க வேண்டாம் எனவும், முன்கூட்டியே சென்று இந்த மருந்துகளை வாங்கி வைத்துக்கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த வலி நிவாரணிகளை தயாரிக்கத் தேவையான உட்பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதே மருந்து தட்டுப்பாட்டுக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Paracetamol என்னும் வலி நிவாரணி மற்றும் காய்ச்சலைக் குறைக்கும் மாத்திரை அல்லது மருந்துகளைத் தயாரிக்கத் தேவையான உட்பொருட்கள், பெரும்பாலும் இந்தியா, சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்துதான் உலகம் முழுவதற்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version