Home சினிமா சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட்

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட்

0

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ்.

அரசி திருமணம் எப்படி நடந்தது என்ற உண்மை தெரிய வர பாண்டியன் மகளை தனது வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்.

அப்போது பேச்சு வார்த்தையில் மீனா-ராஜி, சுகன்யா தான் ராஜி மனதை கெடுத்தார், திரையரங்கிற்கு அழைத்து சென்றார், திருமணத்திற்கு முந்தைய நாள் அனுப்பி வைத்தார் என எல்லாவற்றையும் கூறிவிடுகின்றனர்.

இதனால் பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.

பரபரப்பு எபிசோட்

இந்த விஷயம் எல்லாம் தெரிந்த கோமதி பத்ரகாளியாக மாறி சுகன்யாவை வெளு வெளு என வெளுக்கிறார்.

அப்போது கூட சுகன்யா தன் மீது எந்த தவறும் இல்லை, இரண்டு குடும்பமும் ஒன்று சேர தான் இப்படி செய்தேன் என்கிறார்.

இதனால் மேலும் கோபப்பட்ட கோமதி எனது பிள்ளைகளுக்கு ஏதாவது நடந்தால் நான் பத்ரகாளியாக ஆகிவிடுவேன் என திட்டுகிறார். பாண்டியனிடம், பழனி தனக்கும் சுகன்யாவிற்கும் எப்படி வாழ்க்கை போகிறது என மொத்தமாக கூறுகிறார். 

Source: https://cineulagam.com/article/pandian-stores-serial-july-19-promo-1752900776

NO COMMENTS

Exit mobile version