விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய், ஜனநாயகன் படம்தான் தனது கடைசி திரைப்படம் என அறிவித்துவிட்டார். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவில் இருந்து விலக அவர் முடிவு செய்துள்ளார்.
விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற 2026ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
பார்த்திபன் பதிவு
தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் பார்த்திபன். வார்த்தை ஜாலங்களில் விளையாடுவதில் இவரை மிஞ்ச யாரும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
இந்த நிலையில், பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் விஜய் குறித்தும், தனது கைவிட பட்ட திரைப்படம் குறித்தும் பதிவு செய்துள்ளார்.
இதில், “‘கல்யாணசுந்தரம்’ போட்டோ செஷனோடு முடிந்து (கை)விட்டப் படம். ஆனால் பூஜையன்று 10 ஜோடிகளுக்கு என் சொந்தச் செலவில் தாலி முதல் மெட்டி வரை, தட்டுமுட்டு சாமான் பெட்டி படுக்கை என சீர் செய்து சினிமா பூஜைகளை பிரயோஜனமாகவும் செய்யலாம் என தொடங்கி ஙைத்தேன்.
அதுவே பின் தொடரப்பட்டது பலரால்.
பின்னெரு காலத்தில் தளபதி விஜய் என் தலைமையில் 16 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இதன் மூலம் புண்ணியம் சேர்த்துக் கொள்ளும் விஜய் தான் மணமக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என அப்போது புரட்டிப் பேசினேன். அப்படிப்பட்ட நல்ல காரியங்கள் எல்லாம் சேர்ந்து தான் அவருக்கு கட்சித் துவங்கும் தைரியம் வந்தது” என பதிவு செய்துள்ளார்.
Source: https://cineulagam.com/article/parthiban-post-about-thalapathy-vijay-1753080796
