கிளிநொச்சியில் (kilinochchi) அரச, தனியார் பேருந்து போட்டியால் பயணிகள் தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முன்பாக இன்று (18.07.2024) பிற்பகல் 2.45 மணியளவில் இரண்டு பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
பயணிகளை ஏற்றுவதற்கு முண்டியடித்த பேருந்துகள் வவுனியா நோக்கி பயணித்த
நிலையில் இம்முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை
இதனால் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பயணிகளும் அசெளகரியங்களை
எதிர்கொண்டனர்.
தொடரும் இம்முரண்பாட்டை தீர்த்து பயணிகள் பாதுகாப்பாக பொது போக்குவரத்தினை
பயன்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.
இந்த போட்டி காரணமாக விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமையும்
குறிப்பிடத்தக்கது.
