Home இலங்கை சமூகம் வவுனியா குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு முன் பெரும் அவலம் !

வவுனியா குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு முன் பெரும் அவலம் !

0

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக வவுனியா (Vavuniya) குடிவரவு குடியகழ்வு
திணைக்களத்திற்கு முன் பல சச்சரவுகளுக்கு மத்தியில் காத்திருப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு முன் 15 நாட்களுக்கு மேலாக இரவு பகலாக குழந்தைகளுடன்
பொது மக்கள் காத்திருக்கும் பெரும் அவலம் நிகழ்வதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

கழிவு வாய்க்காலின் மிக மோசமான துர்நாற்றம், நுளம்பு கடி தொல்லை,
பாம்புகளின் நடமாட்டம் என பெரும் அவலத்திற்கு முகம் கொடுத்து
வாரக்கணக்கில் இரவு பகலாக படுக்கை விரிப்புக்களை விரித்து படுத்து
உறங்குவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் வேண்டுகோள்

இந்தநிலையில், இந்த பெரும் அவலத்திற்கு
விரைவில் தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், நாள் ஒன்றுக்கு 60 கடவுச் சீட்டுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன நிலையில்
நூற்றுக்கணக்கான பொது மக்கள் இவ்வாறு15 நாட்களுக்கு மேலாக வரிசையில்
நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version