Home இலங்கை சமூகம் வாக்களிக்க விடுமுறை வழங்காத நிறுவன தலைவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

வாக்களிக்க விடுமுறை வழங்காத நிறுவன தலைவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

0

தனியார் துறை மற்றும் அரச ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக விடுமுறை அளிக்குமாறு அனைத்து நிறுவனங்களையும் பெப்பரல் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கமைய, விடுமுறை வழங்காத நிறுவன  தலைவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் அபராதம் மற்றும் ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தல்

இதுபோன்ற சம்பவங்கள்  பதிவாகும் பட்சத்தில் தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு தனியார் துறை மற்றும் அரச ஊழியர்களை பெப்பரல் அமைப்பு கேட்டுக்கொள்கின்றது.

 

 

NO COMMENTS

Exit mobile version