Home இலங்கை அரசியல் எம்.பிக்களுக்கு பேரிடி : இரத்து செய்யப்படவுள்ள ஓய்வூதியம்

எம்.பிக்களுக்கு பேரிடி : இரத்து செய்யப்படவுள்ள ஓய்வூதியம்

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்படும் என அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி(sunil handunnetti) தெரிவித்துள்ளார்.

தனது அரசின் முதல் படியாக, விரயம், ஊழலை தடுக்க முன்னுதாரணமாக செயல்படுவோம் என்றார்.

செலுத்தப்படாத வரிகளின் தொகை

இந்நாட்டில் செலுத்தப்படாத வரிகளின் தொகை ஒரு இலட்சம் கோடி ரூபாவைத் தாண்டியுள்ளதாகத் தெரிவித்த அவர், அந்த வரிகளை மீளப் பெற முடிந்தால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

தம்புத்தேகம பிரதேசத்தில் நடைபெற்ற வர்த்தக கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் 

NO COMMENTS

Exit mobile version