Home இலங்கை சமூகம் மன்னாரில் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்ட மக்கள்

மன்னாரில் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்ட மக்கள்

0

நாடளாவிய ரீதியில் தேர்தலுக்கு பின்னரான பாதுகாப்புக்கு என பொலிஸ் ஊரடங்கு
சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று (22) நண்பகல் வரை
குறித்த ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் முழுமையாக ஊரடங்கு சட்டம்
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது டன் உரிய அனுமதியின்றி நடமாடும் பொது மக்கள்
எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள்

வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்தும்
நிறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரம் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவம் மற்றும் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version