Home இலங்கை அரசியல் நாட்டை விட்டு வெளிநாடு பறந்த நாமலின் மனைவி

நாட்டை விட்டு வெளிநாடு பறந்த நாமலின் மனைவி

0

சிறிலங்கா ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி இலங்கையை விட்டு அதிகாலை வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றையதினம் (22) ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த வேளை அதிகாலை 3.30 மணியளவில், லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை சட்டத்தரணி திலகசிறி வீரசிங்க ஆகியோர் ல் எமிரேட்ஸ் விமானம் மூலம் டுபாய்க்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளியேறியவர்கள்

முன்னதாக நேற்று முன்தினம் நாமல் – லிமினி தம்பதியின் இரண்டு குழந்தைகள், லிமினியின் தாயார் மற்றும் பணிப்பெண் ஆகியோர் நாட்டை விட்டும் வெளியேறிருந்தனர்.

மேலும், முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேவும் நேற்றைய தினம் தனது குடும்பத்தினர் சகிதம் இந்தியாவின் சென்னை நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version