Home இலங்கை சமூகம் யாழில் மாடியில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

யாழில் மாடியில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

0

யாழில் வெற்றிலை துப்ப முயற்சித்த ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

நீர்வேலி, அச்செழு பகுதியை சேர்ந்த சுப்பையா உதயராசா (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 22 ஆம் திகதி மேல் மாடியில் மேசன் வேலையில்
ஈடுபட்டுக்கொண்டிருந்த போது வெற்றிலை துப்புவதற்காக கட்டடத்தின் முகப்பு பகுதிக்கு சென்றவேளை கால் தவறி
கீழே விழுந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனை

இந்நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை
உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம்
உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version