Home முக்கியச் செய்திகள் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூடு : பேருந்து உரிமையாளர் பலி

இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூடு : பேருந்து உரிமையாளர் பலி

0

 ஹங்வெல்ல, நெலுவன்துடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு இன்று (30) இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

வீட்டில் இருந்த போது துப்பாக்கிச் சூடு 

உயிரிழந்தவர் 55 வயதுடைய பேருந்து உரிமையாளர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த நபர் வீட்டில் இருந்த போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரி-56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

Source: https://ibctamil.com/article/person-has-lost-his-life-in-a-shooting-in-hanwella-1727711421?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version