Home இலங்கை அரசியல் அரசாங்கத்தின் தீர்மானங்களை நிறுவனங்கள் மீற முடியாது: வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டு

அரசாங்கத்தின் தீர்மானங்களை நிறுவனங்கள் மீற முடியாது: வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டு

0

“பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் நிறுவனங்கள் அரசாங்கத்தின் தீர்மானங்களை மீறி நடக்க முடியாது. அதற்கான அதிகாரம் நிறுவனங்களுக்கு இல்லை.” என இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கச் செயலாளரும் பெருந்தோட்ட விவகாரங்கள் தொடர்பிலான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகருமான நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்(Vadivel Suresh) தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று(4) நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பல சுற்றுகளாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது.

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு

ஆனால் இது தொடர்பாக சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்கெடுப்பதை முதலாளிமார் சம்மேளனம் தொடர்ச்சியாக புறக்கணித்து வந்தது.

இது சம்பள விவகாரத்தில் தொழிலாளர்களை ஏமாற்றும் முயற்சியாகவே எமக்கு தெரிகிறது.

நிறுவனங்கள் அரசாங்கத்தின் தீர்மானங்களை மீறி நடக்க முடியாது.

அதற்கான அதிகாரம் நிறுவனங்களுக்கு இல்லை. இப்போது உயர்மட்ட குழுவுடன் பேசித் தீர்மானிப்பதாக பெருந்தோட்ட நிறுவனங்கள்
கூறுகின்றன.

மொத்தமாகவுள்ள 22 பெருந்தோட்ட கம்பனிகளுக்கும் ஐவர் மாத்திரமே சொந்தக்காரர்களாக உள்ளனர்.

இவர்கள் தேயிலை துறை மாத்திரமின்றி சுற்றுலா, சிறுபோக உற்பத்தி பயிர்கள், மாணிக்க கல் அகழ்வு தொழில் துறைகளிலும் வலுவாகச் செயற்படுகிறார்கள்”
என்றார்.

Source: https://ibctamil.com/article/plantation-workers-salary-incresed-about-v-suresh-1714793388

NO COMMENTS

Exit mobile version