Home இலங்கை அரசியல் பிரதமர் ஹரினி நாடு திரும்பினார்

பிரதமர் ஹரினி நாடு திரும்பினார்

0

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  தனது சீன விஜயத்தை நிறைவு செய்து இன்று  அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

கட்டுநாயயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக பிரதமர் நாடு திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் “பெண்கள் குறித்த உலகத் தலைவர்கள் மாநாடு 2025”-இல் பங்கேற்பதற்காக கடந்த 11 ஆம் திகதி இரவு இலங்கையிலிருந்து புறப்பட்டிருந்தார்.

சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற இம்மாநாட்டில் பங்கேற்றதுடன், தனது பயணத்தின் போது ஹரிணி அமரசூரிய சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும்  பிரதமர் லி கியாங் ஆகியோருடன் பல இருதரப்பு சந்திப்புகளிலும் கலந்து கொண்டார்.

அவர் இன்று அதிகாலை 4.45 மணிக்கு சீனாவின் குவாங்சோ நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-881 விமானம் மூலம் நாடு திரும்பியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

NO COMMENTS

Exit mobile version