Home இலங்கை அரசியல் மொட்டுக் கட்சியின் ஆதரவு ரணிலுக்கு: இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள பேச்சுவார்த்தை

மொட்டுக் கட்சியின் ஆதரவு ரணிலுக்கு: இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள பேச்சுவார்த்தை

0

எதிர்வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பெறுவார் என உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமது ஆதரவு, கட்சியின் கொள்கைக்கு இணங்கி நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய வேட்பாளருக்கே வழங்கப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன தற்போது தெரிவித்துள்ளது.

இறுதித் தீர்மானம்

எவ்வாறாயினும், அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவிற்கும் இடையில் கடந்த வாரம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version