Home முக்கியச் செய்திகள் காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் : யாழில் ஒருவர் கைது

காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் : யாழில் ஒருவர் கைது

0

 சுன்னாகம், ஊரெழு மேற்கு பகுதியில் 41 வயதுடைய நபர் ஒருவர் இன்றையதினம்(05),
2 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய்
காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version