Home இலங்கை குற்றம் யாழில் பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் : ஒருவர் காயம்

யாழில் பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் : ஒருவர் காயம்

0

யாழ்ப்பாணம்(Jaffna) – பருத்தித்துறை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக
மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்
மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் விசாரணை

பருத்தித்துறை – பொன்னாலை வீதி கடற்கரை வீதியில் இன்று (02) காலை மணல் ஏற்றிச்
சென்ற டிப்பரை பொலிஸார் வழிமறித்துள்ளனர்.

பொலிஸாரின் கட்டளையை மீறி டிப்பர்
பயணித்த நிலையில் டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் இன்னொருவர் காயமடைந்தார்.

சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version