நாட்டில் சேவையிலுள்ள பொலிஸ் அதிகாரிகளில் சுமார் 40 சதவீதமானோர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தொற்றா நோய்களால் பாதிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸ் அதிகாரிகளில் 20% – 40% வரை தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 சதவீதமானோர் பேர் இன்னும் சோதனை செய்யவில்லை.
மீதமுள்ள 30% பேர் சில உடல்நலப் பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
சில அதிகாரிகளுக்கு வீட்டுப் பிரச்சினைகள், வேலையின் அழுத்தம் போன்றவை காரணமாகவும் தொற்றா நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
