Home உலகம் அமெரிக்காவில் பாடசாலை மாணவன் சுட்டுக்கொலை: வெளியான காரணம்

அமெரிக்காவில் பாடசாலை மாணவன் சுட்டுக்கொலை: வெளியான காரணம்

0

அமெரிக்காவில் பாடசாலைக்கு  துப்பாக்கியுடன் வந்த மாணவன் ஒருவரை  காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இச்சம்பவமானது அமெரிக்காவின் விஸ்கான்சின்(wisconsin) மாகாணத்தில் மவுண்ட் ஹாரிப்(mount horeb) பகுதியில் உள்ள பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பாடசாலைக்கு குறித்த மாணவன் துப்பாக்கியுடன் வந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர்  அந்த மாணவன் பாடசாலைக்குள் நுழைவதற்குள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் மாணவன் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் வேறு யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source: https://ibctamil.com/article/police-shot-dead-student-enter-school-with-gun-us-1714657985

NO COMMENTS

Exit mobile version