Home முக்கியச் செய்திகள் தமிழர் பிரதேசத்தில் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு: பல இலட்சம் மரங்கள் மீட்பு

தமிழர் பிரதேசத்தில் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு: பல இலட்சம் மரங்கள் மீட்பு

0

வவுனியா (Vavuniya) – ஓமந்தைப் (Omanthai) பகுதியில் மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் நிறுத்தாது
சென்றமையால் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி பல இலட்சம் பெறுமதியான மரங்களை
கைப்பற்றியுள்ளனர்.

வவுனியா (Vavuniya) பிரதி காவல்துறை மா அதிபர் சாமந்த விஜயசேகரவிற்கு (Samantha Vijayasekara) கிடைக்கப்பெற்ற
இரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர், உடனடியாக
செயல்பட்டு ஓமந்தை, பாலமோட்டைப் பகுதியில் நேற்று (23) இரவு  விசேட
கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, மரங்களை ஏற்றி வந்த பிக்கப் ரக வாகனம் காவல்துறையினர் மீது மோதித் தள்ளும்
வகையில் செயற்பட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

துப்பாக்கி பிரயோகம் 

இதனையடுத்து காவல்துறையினர் குறித்த வாகனத்தை நோக்கி 5 முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது வாகனத்தை கைவிட்டு மரங்களை கடத்திச் சென்றவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
குறித்த வாகனத்தை கைப்பற்றிய காவல்துறையினர் அதில் இருந்து சுமார் 7 இலட்சம் ரூபாய்
பெறுமதியான மரங்களை மீட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர் குறித்த வாகனத்தில்
பயணித்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version