Home சினிமா மேக்கப் ரூமில் அடைக்கப்பட்டு சித்தரவதை அனுபவித்து பிரபல சீரியல் நடிகை- தற்போது பகிர்ந்த ஷாக்கிங் தகவல்

மேக்கப் ரூமில் அடைக்கப்பட்டு சித்தரவதை அனுபவித்து பிரபல சீரியல் நடிகை- தற்போது பகிர்ந்த ஷாக்கிங் தகவல்

0

சீரியல் நடிகை

சீரியல் நடிகைகள் தான் இப்போது வெள்ளித்திரை நாயகிகளை விட மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார்கள்.

இதனாலேயே மக்களிடம் மிகவும் ஆக்டீவாக இருக்க, அதாவது ரசிகர்களின் அதிக கவனத்தை பெற பிரபலங்கள் நிறைய விஷயங்கள் செய்து வருகிறார்கள்.

அப்படி பாலிவுட் சின்னத்திரையின் பிரபல நாயகி படப்பிடிப்பு தளம் ஒன்றில் தனக்கு நடந்த மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

இந்த பிரச்சனையை வெளியே கூற பயந்து இத்தனை நாள் சொல்லாமல் இருந்ததாகவும், தற்போது தைரியத்துடன் வெளியே சொல்ல துணிந்துவிட்டேன் என கூறியிருக்கிறார்.

நடிகையின் பதிவு

பாலிவுட் சின்னத்திரையில் கடந்த 10 வருடங்களாக நடித்து வருபவர் கிருஷ்ண முகர்ஜி.

இவர் தனது சமூக வலைதளத்தில், ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என இத்தனை நாட்கள் தைரியம் வந்தது இல்லை, ஆனால் இன்று அதை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

தங்கல் டிவியில் எனது கடைசி நிகழ்ச்சியான சுப் ஷகுன் நிகழ்ச்சி செய்யத் தொடங்கியபோது இந்த மனச்சோர்வு எனக்கு தொடங்கியது, அது என் வாழ்வின் மிக மோசமான முடிவு.

தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ள தொகுப்பாளினி பிரியங்கா- அவரே வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ

தயாரிப்பு நிறுவனமும், தயாரிப்பாளர் குந்தன் சிங்கும் என்னைப் பலமுறை துன்புறுத்தியுள்ளனர். ஆடைகளை மாற்றும் போது அவர்கள் ஒருமுறை என்னை என் மேக்கப் அறையில் அடைத்து வைத்தனர்.

5 மாதங்களாக இன்றுவரை எனது சம்பளத்தை தரவில்லை, இதற்காக தயாரிப்பு நிறுவனத்தை பலமுறை அணுகியும் பதில் கிடைக்கவில்லை.

நான் முழுவதும் பாதுகாப்பற்று உடைந்து பயந்துவிட்டேன், இதே போல் மீண்டும் நடந்தால் என்ன ஆகும், எனக்கு நீதி வேண்டும் என அவர் எழுதியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version