Home முக்கியச் செய்திகள் தமிழர் பகுதிகளில் நடைபெற்ற பொஸன் நிகழ்வு

தமிழர் பகுதிகளில் நடைபெற்ற பொஸன் நிகழ்வு

0

யாழ்ப்பாணத்தில்(Jaffna) இன்றையதினம் பொஸன் பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது.

பௌத்த மக்களால் இன்றையதினம்(21) நாடளாவிய ரீதியில் பொஸன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அதற்கமைய, பொஸன் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை காவல்துறையினரால் குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டி என்பன வழங்கப்பட்டுள்ளன.

பொஸன் நிகழ்வு

வட்டுக்கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரி கொஸ்தாவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது வீதியில் சென்றவர்கள் ஆர்வத்துடன் சிற்றுண்டிகளையும், குளிர்பானங்களையும் அருந்தியதை அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொசன் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் இன்று இரவு கிளிநொச்சி 55 வது காலாட்படை பிரிவுக்கு முன்பாக மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதில் சுமார் 500 மேற்பட்ட மக்கள் கலந்து அன்னதானம் பெற்று உண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version