Home இலங்கை சமூகம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ள தபால் ஊழியர்கள்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ள தபால் ஊழியர்கள்

0

நாளை தொடக்கம் (08) 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

“இன்று (07) மாலை 04 மணி முதல் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

 48 மணிநேர வேலைநிறுத்தம்  

ஏனைய அனைத்து தபால் நிலையங்களிலும் இன்று (07) நள்ளிரவு முதல் இந்த வேலைநிறுத்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.

இதன்போது, மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/post-officers-decided-to-strike-for-two-days-1720336754

NO COMMENTS

Exit mobile version