Home இலங்கை அரசியல் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

0

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவானதையடுத்து நேற்றையதினம் (25) நாடளுமன்றம் கலைக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து பொதுதேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல்

அத்துடன் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதற்கான பொதுத் தேர்தலுக்கான  தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version