Home இலங்கை அரசியல் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலுக்காக தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

0

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதியை தேர்தல் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நாடளாவிய ரீதியில் கடந்த 21 ஆம் திகதி நடைபெற்று முடிந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலானது நவம்பர் மாதம் 14  இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 31, நவம்பர் முதலாம் திகதி மற்றும் நான்காம் திகதிகளில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்களிப்பு

அத்தோடு, குறித்த தினத்தில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களுக்கும் நவம்பர் ஏழாம் திகதி மற்றும் எட்டாம் திகதிகளில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கோ அல்லது பிரதேச செயலகத்திற்கோ சென்று வாக்களிக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

Source: https://ibctamil.com/article/postal-voting-date-parliamentary-election-2024-1728534356

NO COMMENTS

Exit mobile version